Monday 10 August 2015

ஆறாம் ஆவரணம்

ராகம்: மோகனம்
தாளம்: மிஸ்ர சாபு

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஜய ஜகதீஸ்வரி
சிவகாமேஸ்வர ப்ரிய மனோஹரி நமஸ்தே

அனுபல்லவி
ஸர்வக்ஞாதி தச சக்தி கேலித அந்தர் தசார
சக்ரேஸ்வரி த்ரிபுர மாலினி சூலினி

சரணம்
ஸர்வரக்ஷாகர சக்ர நிலயே ஸதயே
நிகர்ப்ப யோகினி கண சேவித ஸகலே
சூர்ய க்ரஹ ப்ரீத்யர்த்த அனுக்ரஹ காரனே
மோகன மாணிக்யா பரண அலங்க்ருதே

அர்த்தம்:
உலக நாயகியான அகிலாண்டேஸ்வரியே, வெற்றி அளிப்பவளே, காமேஸ்வரரான சிவனின் விருப்பத்திற்கு உரியவளே, அழகானவளே, உனக்கு என் நமஸ்காரங்கள்.

ஸர்வக்ஞா முதலிய 10 சக்திகள் வீற்றிருக்கும் 10 உட்புற முக்கோணங்களால் ஆன அந்தர் தாசாரம் என்ற ஆவரணத்தின் ஈஸ்வரியாக, த்ரிபுரமாலினியாக, சூலத்தை கையில் கொண்டு அமர்ந்திருக்கிறாய். 

ர்வரக்ஷாகரம் என்ற இந்த ஆவரணத்தில் இருந்து, அனைவரையும் காத்து அருள்கிறாள். அவளே ஸதி தேவியும் ஆவாள். நிகர்ப்ப யோகினியால் வணங்கப்படுகிறாள்.  சூர்ய க்ரஹத்தின் அனுக்ரஹம் கிடைக்கச்செய்கிறாள். அழகிய மாணிக்க ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருக்கிறாள். 

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment