Friday 31 July 2015

இரண்டாம் ஆவரணம்

ராகம்: பைரவி
தாளம்: கண்ட ஜாதி த்ரிபுடை (2 கலை)


பல்லவி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பாலயமாம்
ஸர்வாசபரிபூரக சக்ரேஸ்வரி

அனுபல்லவி
ஸ்ரீ மத் த்ரிபுரசுந்தரி குப்த யோகினி

மத்யம கால சாஹித்யம் 
ஷோடசதள நித்யா தேவி சமூஹே த்விதிய ப்ரகாரே வேத சாரே

சரணம்
சங்கீத ரஸிகே சிவே கரத்ருத
அங்குச தனுர் பாச புஷ்ப தரனே
அங்காரக அனுக்ரஹனுதே  ஸ்ரீ லலிதே
மங்கள ப்ரவாள மாலா கரனே

அர்த்தம்:
ஸ்ரீ சக்ரத்தின் இரண்டாவது ஆவர்ணமான ஸர்வாசபரிபூரக சக்ரத்தின் ஈச்வரியான அகிலாண்டேஸ்வரி என்னை காக்க வேண்டும்.

த்ரிபுரசுந்தரியும், குப்த யோகினியும், 16 நித்யா தேவிகளும் உன்னை இந்த 16  இதழ்களை கொண்ட இந்த தாமரையில் சூழ்ந்துள்ளனர். நீயே வேத சாரம்.

சங்கீதத்தை ரஸிப்பவள் நீ. மங்களமானவள் நீ. உன் கரங்களில் அங்குசம், பாசம், ஐந்து புஷ்பங்கள், கரும்பு வில் ஆகியவற்றை வைத்துள்ளாய் . ஹே லலிதே, இந்த ஆவரணத்தில் உன்னை வைத்து துதித்தால் அங்காரகனின் அருள் கிடைக்க உதவுகிறாய். மங்களமான, சிவப்பு நிறமுடைய பவழ மாலையினை உன் கரங்களில் வைத்துள்ளாய்.

தாளம்: கண்ட ஜாதி த்ரிபுட தாளம் - ஆதி தாளம் போல், அனால் நடு விரல் எண்ணிய பிறகு ஆள்காட்டி விரலையும் எண்ண வேண்டும். மொத்தம் 9 அக்ஷரங்கள் உள்ளது இத்தாளம். அதாவது, 
1 தட்டு = 1
சுண்டு விரல், மோதிர விரல், நடு விரல், ஆள் காட்டி விரல் = 4
பின் 
1 தட்டு, 1 திருப்பு, 1 தட்டு, 1 திருப்பு = 4

மொத்தம் = 1+4+4 = 9

2 கலை என்றால், இருமுறை ஒவ்வொரு அங்கங்களையும் செய்ய வேண்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday 29 July 2015

முதல் ஆவரணம்

ராகம்: துர்கா
தாளம்: ஆதி
பல்லவி
அகிலாண்டேஸ்வரி துரித நிவாரிணி
த்ரைலோக்ய மோகன சக்ர நிவாசினி

அனுபல்லவி

அப்புஸ்தல வாஸ ஜம்புகேஸ்வர
மனோஹரி மாதவ சோதரி ஸ்ரீ கரி

சரணம்

சதுரஸ்ர பூபுர சக்ரேஸ்வரி த்ரிபுரே
சதுஸ் ஷஷ்டி கோடி யோகினி பரிவாரே
சம்க்ஷோபினி அணிமாதி சித்தி சமூஹே
தசமுத்ர ஆராத்ய ப்ரதம ப்ரகாரே

மத்யம கால சாஹித்யம்

ப்ருஹஸ்பதி க்ரஹ அனுக்ரஹனுதே
ப்ரகட யோகினி சமூஹ சேவிதே
புஷ்பராக ரத்ன மணிமய தரே
சரணாகத ஜன சம்ரக்ஷிதே

அர்த்தம்:
ஸ்ரீ சக்ரத்தின் முதல் ஆவர்ணமான த்ரைலோக்ய மோகன சக்ரத்தில் வசிக்கும் அகிலாண்டேஸ்வரி, அடியார்களின் துன்பங்களுக்கு ,விரைந்து வந்து ஆறுதல் அளிப்பவள்.

பஞ்ச பூத ஸ்தலங்களுள் நீர் (அப்பு) ஸ்தலமான ஜம்புகேஸ்வரத்தில் வசிக்கும் ஜம்புகேஸ்வரரின் மனதிற்கு உகந்தவள். மாதவனின் சஹோதரி மற்றும் மங்களம் தருபவள்.

சதுரமான வடிவு கொண்ட முதல் ஆவர்ணமான பூபுரத்தின் தலைவி த்ரிபுரா. அவளோடு சேர்ந்த 64 கோடி யோகினிகள் இந்த ஸ்ரீ புரத்தினுள் உள்ளனர். சம்க்ஷோபினி முதலான 10 சக்திகள், அணிமா முதலான 8 சக்திகள் மற்றும் 10 முத்ரா சக்திகள் அன்னையை இந்த முதல் ஆவர்ணத்தில் ஆராதிக்கிறார்கள்.

இந்த ஆவர்ணத்தில் அம்பிகையை ஆராதிப்பதால், குரு (ப்ருஹஸ்பதி) அருள் கிடைக்கும். இந்த ஆவரணத்தின் யோகினிகள், ப்ரகட யோகினி ஆவார்கள். புஷ்பராக ரத்ன மாலையினை அம்பாள் அணிந்துள்ளாள். தன்னை சரணடைந்தவர்களை காத்தருள்கிறாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday 28 July 2015

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி த்யானம்

ராகம்: பூர்வி கல்யாணி
தாளம்: ஆதி

பல்லவி
ஸ்ரீ சக்ர நாயகி அகிலாண்டேஸ்வரி
தீன தயாபரி பாலயமாம்

அனுபல்லவி
ஸ்ரீ நகரேஸ்வரி ஸ்ரீ ஹரி சோதரி
ஸ்ரீ வித்யோபாஸன ப்ரியகரி சங்கரி

சரணம்
பாவ ராக தாள ஸ்வரூபிணி
ப்ரபாத கால பார்வதி
அபராஹ்ன கால மஹா லக்ஷ்மி
ஸந்த்யா சமயே சரஸ்வதி

மத்யம கால சாஹித்யம்
நவராத்ரி பூஜா நந்திதே
நவாவரண கீர்த்தன ப்ரியே
நவ வித யோகினி பரிவரே
நதஜன ஸமூஹ ஸம்ரக்ஷிதே

அர்த்தம்:சாமானியவர்களுக்கு தயை புரிபவளும், ஸ்ரீ சக்ரத்தின் நாயகியுமான அகிலாண்டேஸ்வரியே, உன்னை வணங்குகிறேன்.

ஸ்ரீ நகரம் என்னும் இடத்திற்கு தலைவியே, ஸ்ரீ ஹரியின் (விஷ்ணு)  சஹோதரியே, ஸ்ரீ வித்யா உபாசனையில் பெரும் விருப்பம் கொண்டவளே, சங்கரனின் மனைவியே -எல்லாம் நீயே

சங்கீதத்தின் முக்கிய அம்சமான பாவம், ராகம், தாளம் ஆகியவற்றின் உருவம் நீ.காலையில் பார்வதியாகவும், மதியத்தில் லக்ஷ்மியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் நீ இருக்கிறாய்.

நவராத்ரியில் உனக்கு அளிக்கப்படும் பூஜையினால் மனம் மகிழ்வாய். நவாவரண கீர்த்தனைகளிலும் மிகுந்த ஆசை உடையவள். உன்னை சுற்றி 9 விதமான யோகினிகள் உள்ளனர். சாதாரண மானிட சமூஹத்தை பரிவோடு காப்பவள்.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Monday 27 July 2015

கணபதி த்யானம்

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி


பல்லவி
பிரசன்ன கணபதே நமோஸ்துதே
பிரணவ ஸ்வரூபா பார்வதி சுதா

அனுபல்லவி
கரத்ருத பாச அங்குச தரனே
சுர பூஜித பய சங்கட ஹரனே

சரணம்
ஸ்ரீ வித்யோபாசன பிரதம ஆராதகா
சிவ அனுக்ரஹநுத வாரண முகா
அகிலாண்டேஸ்வரி சாந்த்யத காரண
கஜாரண்ய க்ஷேத்ர மத்ய நிவாஸா

மத்யம கால சாஹித்யம்
பண்ட சைன்ய ப்ரதிஷ்டித விக்ன யந்த்ர நிர்பின்ன விக்னேஸ்வரா
பண்டாசுர மத கண்டன வைபவ சக்தி சேன முக்ய காரணா

அர்த்தம்:
பிரணவ ஸ்வரூபனும், பார்வதி புத்ரனுமான பிரசன்ன கணபதிக்கு என் முதற்கண் வணக்கம். 

நீ உன் கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் வைத்திருப்பாய். நன்மக்கள் உன்னை வணங்கினால் அவர்களின் பயம், சங்கடம் அனைத்தையும் போக்கி விடுவாய்.

ஸ்ரீ வித்யா உபாசகர்களில் முதன்மையானவன் நீ. பார்வதி தேவி உன்னை உருவாக்கியவுடன், "நான் நீராட செல்கிறேன். யாரையும் உள்ளே விடாதே" என்று கூறினார். அப்போது அந்த இடத்திற்கு வந்த பரமசிவனையே நீ உள்ளே விடவில்லை. அதனால் அவர் கையால் தலை அறு பட்டு பின் பார்வதி தேவி தனக்கு நீ வேண்டும் என்று சிவனிடம் கேட்டதால், அவர் அருளால் வாரண முகனாக மீண்டும் வந்தாய்.
நீ உனது அன்னையான அகிலாண்டேஸ்வரியின் எதிரில் இருப்பதால் தான், எப்போதும் சாந்தஸ்வரூபிணியாக இருக்கிறாள். கஜாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் திருவானைக்கா என்ற இடத்தின் மையத்தில் இருக்கிறாய்.

பண்டாசுரனை எதிர்த்து, ஸ்ரீ லலிதாம்பிகை போரிட்ட போது, பண்டாசுரனின் சைன்யம், குறுக்கு வழியில் அம்பிகையின் படையை தோற்கடிக்க, விக்ன யந்த்ரத்தினை வைத்தனர். அதனை செயலிழக்க செய்தவன் நீ. பண்டாசுரனை வீழ்த்தியதில் சக்தியின் படையில் முக்யமான காரண கர்த்தா நீ.

கஜானனம் ஸ்லோகம் - நாட்டை ராகம் கேட்க:
Check this out on Chirbit

பிரசன்ன கணபதே - நாட்டை ராகம் - ஆதி தாளம் கேட்க:
Check this out on Chirbit

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரணம்

ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட சுப்பையர் அவர்கள், தேவி ஸ்ரீ காமாக்ஷியின்  பேரில் நவாவரணம் பாடினார். அதனால் தூண்டப்பட்ட ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், அவர் பிறந்த ஊரான திருவாரூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ கமலாம்பிகை மீது நவாவரணம் பாடினர்.

இவர்கள் இருவரின் நவாவரணங்களை கேட்டு அனுபவித்ததின் பயனாக எனக்கும்  நான் வளர்ந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் அருகாமையில் இருக்கும் திருவானைக்கா என்கிற ஜம்புகேஸ்வரத்தில் அமர்ந்து நல்லருள் பொழியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் மீது நவாவரணம் பாட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

அவள் அருளால் அவள் தாள் வணங்கி, அவளுக்கு எதிரே அமர்ந்து, அவள் முகத்தில் புன்முறுவல் மாறாது  கருணை பொழிய வைக்கும் ஸ்ரீ பிரசன்ன கணபதியின் அருளாசியுடன் இந்த கீர்த்தன தொகுப்பை அகிலாண்டேஸ்வரியின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நம:

நவாவரண கீர்த்தன தொகுப்பு

நவாவரணம் என்பது, தேவி உபாசனையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இதில், அம்பிகையை 9 ஆவரணம் (சுற்று)  கொண்ட ஸ்ரீ சக்ரத்தில் வைத்து பூஜை செய்வார். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் ஒவ்வொரு சக்தி, யோகினி இருப்பார். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் ஒரு பெயர் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை அளிக்கும். 

இந்த நவாவரணத்தில், இவற்றைத்தவிர, ஒவ்வொரு நவக்ரஹ தேவதை, அந்தந்த தேவதைக்குரிய ரத்னங்களை அன்னை அணிந்திருப்பதாக பாடியுள்ளேன். வித்வான் ஸ்ரீ M.K.வெங்கட்ராமன் அவர்களின் "ஊத்துக்காடு வேங்கட கவி காமாக்ஷி நவாவர்ண கீர்த்தனைகள்" என்ற புத்தகத்தில், ஆந்திர மாநிலத்தில், இவ்வாறு 9 ஆவரணத்திற்கும் ஒரு நவக்ரஹ தேவதை, ஒரு ரத்னம் வைத்து பூஜிப்பார்கள் என்று கூறி இருந்தார். அவற்றை வைத்து இவ்வாறு எழுதியுள்ளேன்.

தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.

ஆதி சங்கரர், அகிலாண்டேஸ்வரியின் செவிகளில் ஸ்ரீ சக்ர தாடங்கங்களை ப்ரதிஷ்டை செய்வதற்கு முன் உக்ரமாக இருந்தாள். அவர் ப்ரதிஷ்டை செய்த பின், சாந்த ஸ்வரூபிணியாக மாறினாள். என்றும் சாந்தமாக இருப்பதற்காக, மகன் விநாயகரின் திரு உருவத்தையும் சிலாரூபமாக அம்பிகையின் எதிரில் ப்ரதிஷ்டை செய்தார். அவரே பிரசன்ன கணபதி.

அந்த பிரசன்ன கணபதியினை வணங்கி, விக்னங்கள் ஏற்படாமல் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று வேண்டி, கணபதி த்யான கீர்த்தனம் அமைய பெற்றுள்ளது. நாட்டை ராகத்தில் உள்ளது இந்த கீர்த்தனை.

அடுத்து, அகிலாண்டேஸ்வரி த்யான கீர்த்தனை, பூர்வி கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது. இதில், அவளை பற்றி பாட அவள் அருள வேண்டும் என்பது தான் பிரார்த்தனை.

இதனை தொடர்ந்து 9 ஆவரணங்கள். ஆவரணத்தின் பெயர், ராகம், நவக்ரஹ தேவதை, ரத்னம் என்னும் படியாக,

1. த்ரைலோக்யமோகன சக்ரம் - துர்கா, ப்ருஹஸ்பதி, புஷ்பராகம் 
2. ஸர்வாசபரிபூரக சக்ரம் - பைரவி, அங்காரகன், பவழம் 
3. ஸர்வஸம்க்ஷோபன சக்ரம் - ரஞ்சனி, சுக்ரன், வைரம் 
4. ஸர்வசௌபாக்யதாயக சக்ரம் - ஸ்ரீ, சந்திரன், முத்து
5. ஸர்வார்த்தசாதக சக்ரம் - கமலா மனோஹரி, நீலம், சனைஸ்சரண்    
6. ஸர்வரக்ஷாகர சக்ரம் - மோகனம், மாணிக்கம், சூரியன் 
7. ஸர்வரோகஹர சக்ரம் - சரஸ்வதி, மரகதம், புதன் 
8. ஸர்வசித்திப்ரதயாக சக்ரம் - கீரவாணி, கேது, வைடூர்யம் 
9. ஸர்வானந்தமைய சக்ரம் - ரேவதி, ராகு, கோமேதகம் 

இதற்கு அடுத்து, மங்களாஸாசன  கீர்த்தனை. அம்பிகையை வணங்கி, என்றும் அவளுக்கு வெற்றி என்று பாடுவதாக, லலிதா ராகத்தில்  அமைந்துள்ளது.

இதில் எல்லா ராகங்களும் (கணபதி த்யான கீர்த்தனத்தை விடுத்து) அம்பாள் பெயராலேயே அமைந்துள்ளது.

அவ்யாஜ கருணாமூர்த்தி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அனைவருக்கும் நல்லருள் புரிய என்றும் வேண்டும்,

சரண்யா