Monday 17 August 2015

மங்களாஸாஸனம்

ராகம்: லலிதா
தாளம்: ரூபகம்

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஜயதி

மத்யம கால சாஹித்யம்
அவ்யாஜ கருணா மூர்த்தி ஜம்புகேஸ்வருணி ராணி

அனுபல்லவி
சுக ஸனகாதி அர்ச்சித ஸுமுகி சுவாஸினி

மத்யம கால சாஹித்யம் 
கஜாரண்ய நிவாஸினி கஜமுக ஸ்கந்த ஜனனி

சரணம்
ஸுமேரு ஷைல ஸ்ரீ புர கதம்ப வன மத்ய
சிந்தாமணி க்ருஹாந்த காமேஸ்வராங்கஸ்திதே
நவாவரண கீர்த்தன சிந்தித சுப தாயிகே
துஷ்க்ருத ஸம்ஹாரினே மாம்பாஹி லலிதே

அர்த்தம்:
மிகுந்த கருணை கொண்டவளும், ஜம்புகேஸ்வரரின் நாயகியுமான அகிலாண்டேஸ்வரிக்கு என்றும் வெற்றி.

சுக ப்ரம்மம், சனகர் முதலிய முனிகள், அம்பாளை அர்ச்சிக்கிறார்கள். அழகிய முகமுடையவள். மங்களமானவள்.  கஜாரண்யம் எனப்படும் திருவானைக்காவில் வசிப்பவள். கஜமுகனான வினாயகனையும், முருகனையும் ஈன்றவள்.

சுமேரு மலையின் மேல் இருக்கும் ஸ்ரீபுரத்தில், கதம்பவனத்தின் மத்தியில் உள்ள, சிந்தாமணி க்ரஹத்தினுள், காமேஸ்வரரின், மடியில் அமர்ந்திருக்கிறாள். நவாவர்ண கீர்த்தனைகளை நினைத்தாலே, நற்பலன்களை தருவாள். தீமைகளை அழிப்பாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த  லலிதாம்பிகை நம்மை காக்கட்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment