Monday 17 August 2015

மங்களாஸாஸனம்

ராகம்: லலிதா
தாளம்: ரூபகம்

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஜயதி

மத்யம கால சாஹித்யம்
அவ்யாஜ கருணா மூர்த்தி ஜம்புகேஸ்வருணி ராணி

அனுபல்லவி
சுக ஸனகாதி அர்ச்சித ஸுமுகி சுவாஸினி

மத்யம கால சாஹித்யம் 
கஜாரண்ய நிவாஸினி கஜமுக ஸ்கந்த ஜனனி

சரணம்
ஸுமேரு ஷைல ஸ்ரீ புர கதம்ப வன மத்ய
சிந்தாமணி க்ருஹாந்த காமேஸ்வராங்கஸ்திதே
நவாவரண கீர்த்தன சிந்தித சுப தாயிகே
துஷ்க்ருத ஸம்ஹாரினே மாம்பாஹி லலிதே

அர்த்தம்:
மிகுந்த கருணை கொண்டவளும், ஜம்புகேஸ்வரரின் நாயகியுமான அகிலாண்டேஸ்வரிக்கு என்றும் வெற்றி.

சுக ப்ரம்மம், சனகர் முதலிய முனிகள், அம்பாளை அர்ச்சிக்கிறார்கள். அழகிய முகமுடையவள். மங்களமானவள்.  கஜாரண்யம் எனப்படும் திருவானைக்காவில் வசிப்பவள். கஜமுகனான வினாயகனையும், முருகனையும் ஈன்றவள்.

சுமேரு மலையின் மேல் இருக்கும் ஸ்ரீபுரத்தில், கதம்பவனத்தின் மத்தியில் உள்ள, சிந்தாமணி க்ரஹத்தினுள், காமேஸ்வரரின், மடியில் அமர்ந்திருக்கிறாள். நவாவர்ண கீர்த்தனைகளை நினைத்தாலே, நற்பலன்களை தருவாள். தீமைகளை அழிப்பாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த  லலிதாம்பிகை நம்மை காக்கட்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday 15 August 2015

ஒன்பதாம் ஆவரணம்

ராகம்: ரேவதி
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி த்ரிபுரசுந்தரி
இச்சா சக்தி ஞான சக்தி க்ரியா சக்தி ரூபிணி

மத்யம கால சாஹித்யம்
ஸ்ரீபுர பிந்து மத்ய நிலயே
ஸர்வானந்தமய சக்ர வாசினே

அனுபல்லவி
சந்திர சூர்ய வஹ்னி மண்டல மத்யே
பஞ்சப்ரம்மாஸனஸ்திதே ரக்ஷிதே

சரணம்
பராபராதி ரஹஸ்ய யோகினி பூஜிதே லலிதே
பரமேஸ்வர ப்ரிய பரமந்த்ர ரூப பாமர ஜன பாலிதே
ராகு க்ரஹ சந்தோஷ காரனே சச்சிதானந்தமயி சின்மயி
நீல வஸ்த்ர தாரினே கோமேதக ரத்ன மணி மாலா கரனே

அர்த்தம்:
த்ரிபுரசுந்தரியான அகிலாண்டேஸ்வரி, இச்சா, க்ரியா, ஞான சக்தி வடிவுடையாள். ஸ்ரீ சக்ரத்தின் மையமான பிந்துவில் நிலைபெற்றுள்ளாள். ஸர்வானந்தமய சக்ரத்தில் வசிக்கிறாள்.

சந்திரன், சூர்யன் மற்றும் அக்னி ஆகிய மண்டலங்களில் வசிக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய ப்ரம்மங்களால் ஆன ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். அனைவரையும் காக்கிறாள். 

பராபராதி ரஹஸ்ய யோகினிகளால் வணங்கப்படுகிறாள். அவளே லலிதா. பரமேஸ்வரனின் ப்ரியத்திற்கு உரியவள். மந்த்ர ஸ்வரூபம் ஆனவள். பாமர மக்களை காக்கிறாள். ராகுவின் மகிழ்ச்சிக்கு வழிவகுத்து அவர் அருள் நமக்கு கிடைக்கச்செய்கிறாள். சத், சித், ஆனந்த மயமானவள். தூய அறிவுடையவள். நீல வஸ்த்ரத்தினை உடுத்தி, கோமேதக ரத்ன மாலையை கையில் வைத்துள்ளாள். 

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday 13 August 2015

எட்டாம் ஆவரணம்

ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஸுக ப்ரதாயினி
கதம்ப வன வாஸினி பாலயமாம் ஸ்ரீ

அனுபல்லவி
ஸர்வஸித்திப்ரதாயக சக்ர நிவாஸினி
அதி ரஹஸ்ய யோகினி ஸமூஹ ஸேவிதே

சரணம்
ஸ்ரீபுர த்ரிகோணக வாஸினி கௌலினி
த்ரிகுணாத்மிகே  பாலே பண்டாஸுர பஞ்சனி
வைடூர்ய மணி மாலா தாரிணி ஹம்ஸினி
கேது க்ரஹ ப்ரீத்யர்த்த காரணி பூரணி

அர்த்தம்:
கதம்ப வனத்தில் வசிப்பவளும், சுகத்தினை அளிப்பவளுமான அகிலாண்டேஸ்வரி, என்னை காக்கட்டும்.

ஸர்வ ஸித்தி ப்ரதாயக சக்ரத்தில் வசிப்பவளான அவளை, அதி ரஹஸ்ய யோகினிகள் வணங்குகிறார்கள்.

ஸ்ரீபுரத்தின் முக்கோணத்தில் வசிக்கும் கௌலினி, முக்குணங்களையும் தன்வசப்படுத்தியவள். அவளே, பாலா. பண்டாசுரனை வதைத்தவள். வைடூர்ய மணி மாலையினை அணிந்தவள். அன்னம் போன்றவள். கேது த்ருப்தி அடைய காரணமானவள். முழுமையானவள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday 12 August 2015

ஏழாம் ஆவரணம்

ராகம்: சரஸ்வதி
தாளம்: ரூபகம்

பல்லவி
அகிலாண்டேஸ்வரி வாணி ரமா ஸேவிதே
அஷ்டகோணஸ்திதே த்ரிபுரஸித்தாதி பூஜிதே

அனுபல்லவி
வசின்யாதி வாக்தேவதா வந்தித மனோலாஸினி

மத்யம கால சாஹித்யம்
ஸர்வரோகஹர சக்ரவாஸினி ரஹஸ்ய யோகினி

சரணம்
வித்யா அவித்யா ஸ்வரூபிணி
சிதானந்த ப்ரகாசினி
புத க்ரஹ ப்ரீத்யர்த்தே
மரகத மணி கர வலயே

அர்த்தம்:
சரஸ்வதியும், லக்ஷ்மியும் வணங்கும் அகிலாண்டேஸ்வரி, அஷ்டகோணம் எனப்படும், எட்டு முக்கோணங்களாலான  ஆவர்ணத்தில் இருக்கிறாள். திரிபுரஸித்தா பூஜிக்கிறாள். 

வசினி முதலிய எட்டு வாக்தேவதைகள் இங்கு இருந்து வழிபாடு செய்கிறார்கள். அதனால் மனம் மகிழ்கிறாள். ஸர்வரோகஹர சக்ரத்தில் வசிக்கிறாள். ரஹஸ்ய யோகினிகள் அன்னையை இங்கு வணங்குகிறார்கள்.

அறிவுள்ள அஜடமாகவும், அறிவற்ற ஜடமாகவும் இருப்பவள் அம்பாள். தூய்மையான ஆனந்தத்தினால் ப்ரகசிப்பவள்.  புதனின் அருள் கிடைக்கச்செய்பவள். மரகதத்தினால் ஆன வளையல்களை கரத்தில் அணிந்திருப்பவள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday 10 August 2015

ஆறாம் ஆவரணம்

ராகம்: மோகனம்
தாளம்: மிஸ்ர சாபு

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஜய ஜகதீஸ்வரி
சிவகாமேஸ்வர ப்ரிய மனோஹரி நமஸ்தே

அனுபல்லவி
ஸர்வக்ஞாதி தச சக்தி கேலித அந்தர் தசார
சக்ரேஸ்வரி த்ரிபுர மாலினி சூலினி

சரணம்
ஸர்வரக்ஷாகர சக்ர நிலயே ஸதயே
நிகர்ப்ப யோகினி கண சேவித ஸகலே
சூர்ய க்ரஹ ப்ரீத்யர்த்த அனுக்ரஹ காரனே
மோகன மாணிக்யா பரண அலங்க்ருதே

அர்த்தம்:
உலக நாயகியான அகிலாண்டேஸ்வரியே, வெற்றி அளிப்பவளே, காமேஸ்வரரான சிவனின் விருப்பத்திற்கு உரியவளே, அழகானவளே, உனக்கு என் நமஸ்காரங்கள்.

ஸர்வக்ஞா முதலிய 10 சக்திகள் வீற்றிருக்கும் 10 உட்புற முக்கோணங்களால் ஆன அந்தர் தாசாரம் என்ற ஆவரணத்தின் ஈஸ்வரியாக, த்ரிபுரமாலினியாக, சூலத்தை கையில் கொண்டு அமர்ந்திருக்கிறாய். 

ர்வரக்ஷாகரம் என்ற இந்த ஆவரணத்தில் இருந்து, அனைவரையும் காத்து அருள்கிறாள். அவளே ஸதி தேவியும் ஆவாள். நிகர்ப்ப யோகினியால் வணங்கப்படுகிறாள்.  சூர்ய க்ரஹத்தின் அனுக்ரஹம் கிடைக்கச்செய்கிறாள். அழகிய மாணிக்க ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருக்கிறாள். 

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Friday 7 August 2015

ஐந்தாம் ஆவரணம்

ராகம்: கமல மனோஹரி
தாளம்: ரூபகம்

பல்லவி
அகிலாண்டேஸ்வரி கமல மனோஹரி
பஹிர் தசார விஹாரினே பஞ்ச க்ருத்ய பராயனே

அனுபல்லவி
த்ரிபுராஸ்ரீ வந்திதே குலோதீர்ண யோகினி சமூஹ சேவிதே

மத்யம கால சாஹித்யம் 
ஸர்வார்த்தஸாதக சக்ரமயே  ஸகலகார்ய சித்தி ப்ரதாயிகே சிவே

சரணம்
கமலா கோடி சேவித லலிதா பரமேஸ்வரி
ஸகல ஜீவ பூஜித சங்கட பய மோசனி
இந்த்ர நீல ரத்ன  ஹார சுந்தர கண்ட வதனே - ரவி
புத்திர சனைச்சர க்ரஹ ப்ரீத்யர்த்த காரனே

அர்த்தம்:
அழகிய தாமரை மலரின் மனதினை கவரும் அழகுடைய அகிலாண்டேஸ்வரி, வெளியில் உள்ள 10 முக்கோணங்கள் (பஹிர் தாசாரம்) என்ற ஆவர்ணத்தில் இருக்கிறாள். ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம் மற்றும் அனுக்ரஹம் என்ற ஐந்து தொழில்கள் செய்கிறாள்.

த்ரிபுராஸ்ரீ இந்த ஆவர்ணத்தின் தலைவி. அவள் வணங்குகிறாள். குலோதீர்ண யோகினிகளும் ஸேவித்துக்கொள்கின்றனர். சர்வார்த்தசாதகம் என்னும் இந்த ஆவர்ணத்தின் மையத்தில் ஆட்சி புரியும் அன்னை, அனைத்து கார்யங்களையும் தடையின்றி நடத்தி வைக்கிறாள். மிகவும் மங்களமானவள்.

கோடி தாமரைகளுக்கு இணையான அழகுடைய லக்ஷ்மி, லலிதா பரமேஸ்வரியான அகிலாண்டேஸ்வரியை  வணங்குகிறாள். எல்லா உயிர்களும் அவளை பூஜித்தால், அவற்றின் சங்கடங்கள், பயம் ஆகியவற்றை அறுக்கிறாள். இந்த்ர நீலத்தால் ஆன மாலையினை தன்  அழகிய கழுத்தில் அணிந்துள்ளாள். சூர்யனின் புதல்வனான சனைச்சரனின் அருள் கிடைக்க காரணமாய் உள்ளாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday 4 August 2015

நான்காம் ஆவரணம்

ராகம்: ஸ்ரீ
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ சிவசங்கரி
சதுர் தசார ஸௌபாக்யதாயினி

மத்யம கால சாஹித்யம்
ஸர்வஸௌபாக்யதாயக நிலயே
த்ரிபுரவாஸின்யாதி ஸேவிதே

அனுபல்லவி
சதுர்தச த்ரிகோனக சக்தி ஸ்திதே
ஸம்ப்ரதாய யோகினி விசேஷ பூஜிதே

சரணம்
சுந்தர முக்தால ஹார கரத்ருதே
சந்த்ர க்ரஹ அனுக்ரஹநுதே
மந்த்ர தந்தர யந்த்ர ஸ்வரூபிணி கமலே
மந்த்ரினி தண்டினி ஸன்னுத ஸகலே

அர்த்தம்:
சிவ சங்கரியான அகிலாண்டேஸ்வரி 14 முக்கோணங்கள் கொண்ட ஆவர்ணத்தில் அமர்ந்து சகல சௌபாக்யங்களையும் நமக்கு தருகிறாள். ஸர்வஸௌபாக்யதாயக சக்ரத்தில் இருக்கும் அவளை த்ரிபுரவாசினி முதலியோர் வணங்குகிறார்கள்.

ஒரோரு முக்கோனத்திலும் ஒரு சக்தி உள்ளாள். சம்ப்ரதாய யோகினிகள்  இந்த ஆவர்ணத்தில் உள்ளனர்.

அழகிய முத்து மாலையினை கையில் வைத்துள்ளாள். சந்திரனின் அருள் கிடைக்க வழி வகுக்கிறாள். அனைத்து மந்த்ர, தந்தர, யந்த்ர ஸ்வரூபமாக உள்ளாள். மந்த்ரினி (மாதங்கி) மற்றும் தண்டினி (வாராஹி) 
சஹிதமாக வீற்றிருக்கிறாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday 1 August 2015

மூன்றாம் ஆவரணம்

ராகம்: ரஞ்சனி
தாளம்: ஆதி

பல்லவி
ஸ்ரீ மாத்ரே அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ சக்ரஸ்தித த்ரிதிய ப்ரகாரே

மத்யம கால சாஹித்யம்
ஸர்வஸம்க்ஷோபன சக்ர நிலயே
ஸர்வ ஜீவ தயா சாகரே 

அனுபல்லவி
அனங்க குஸுமாத்யஷ்ட  தேவி சேவிதே
குப்ததர யோகினி பரிவாரே

சரணம்
வஜ்ர ரத்ன மணி மாலா தரனே
சுக்ர க்ரஹ அனுக்ரஹனுத காரனே
அஷ்டதளாசனஸ்தித ரஞ்சனி வந்திதே
அஷ்ட மகா சித்தி வர்ஷய வர்ஷய

அர்த்தம்:
சிறந்த தாய் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்ரத்தின் மூன்றாவது ப்ரகாரத்தில் இருக்கிறாள். ஸர்வஸம்க்ஷோபனம் என்று பெயர் கொண்ட அந்த சக்ரத்தில், அனைத்து உயிர்களுக்கும் தயை புரிகிறாள்.

அனங்க குஸுமா முதலிய 8 தேவிகள் அன்னையை இந்த ஆவரணத்தில் வணங்குகிறார்கள். இங்கு உள்ள யோகினிகள் குப்ததர யோகினிகள் ஆவார்கள்.

வைர ரத்ன மாலையினை அணிந்துள்ளாள். சுக்ரனின் அனுக்ரஹம் கிடைக்க அருள்வாள். எட்டு இதழ்கள் கொண்ட தாமரையான இந்த ஆவர்ணத்தில் உள்ள ரஞ்சனியினை பூஜிப்பதால், அஷ்ட மஹா சித்திகளும் நமக்கு கிடைக்கும் .

பாடல் கேட்க:

Check this out on Chirbit