Saturday 15 August 2015

ஒன்பதாம் ஆவரணம்

ராகம்: ரேவதி
தாளம்: ஆதி

பல்லவி
அகிலாண்டேஸ்வரி த்ரிபுரசுந்தரி
இச்சா சக்தி ஞான சக்தி க்ரியா சக்தி ரூபிணி

மத்யம கால சாஹித்யம்
ஸ்ரீபுர பிந்து மத்ய நிலயே
ஸர்வானந்தமய சக்ர வாசினே

அனுபல்லவி
சந்திர சூர்ய வஹ்னி மண்டல மத்யே
பஞ்சப்ரம்மாஸனஸ்திதே ரக்ஷிதே

சரணம்
பராபராதி ரஹஸ்ய யோகினி பூஜிதே லலிதே
பரமேஸ்வர ப்ரிய பரமந்த்ர ரூப பாமர ஜன பாலிதே
ராகு க்ரஹ சந்தோஷ காரனே சச்சிதானந்தமயி சின்மயி
நீல வஸ்த்ர தாரினே கோமேதக ரத்ன மணி மாலா கரனே

அர்த்தம்:
த்ரிபுரசுந்தரியான அகிலாண்டேஸ்வரி, இச்சா, க்ரியா, ஞான சக்தி வடிவுடையாள். ஸ்ரீ சக்ரத்தின் மையமான பிந்துவில் நிலைபெற்றுள்ளாள். ஸர்வானந்தமய சக்ரத்தில் வசிக்கிறாள்.

சந்திரன், சூர்யன் மற்றும் அக்னி ஆகிய மண்டலங்களில் வசிக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய ப்ரம்மங்களால் ஆன ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். அனைவரையும் காக்கிறாள். 

பராபராதி ரஹஸ்ய யோகினிகளால் வணங்கப்படுகிறாள். அவளே லலிதா. பரமேஸ்வரனின் ப்ரியத்திற்கு உரியவள். மந்த்ர ஸ்வரூபம் ஆனவள். பாமர மக்களை காக்கிறாள். ராகுவின் மகிழ்ச்சிக்கு வழிவகுத்து அவர் அருள் நமக்கு கிடைக்கச்செய்கிறாள். சத், சித், ஆனந்த மயமானவள். தூய அறிவுடையவள். நீல வஸ்த்ரத்தினை உடுத்தி, கோமேதக ரத்ன மாலையை கையில் வைத்துள்ளாள். 

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment