Saturday 1 August 2015

மூன்றாம் ஆவரணம்

ராகம்: ரஞ்சனி
தாளம்: ஆதி

பல்லவி
ஸ்ரீ மாத்ரே அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ சக்ரஸ்தித த்ரிதிய ப்ரகாரே

மத்யம கால சாஹித்யம்
ஸர்வஸம்க்ஷோபன சக்ர நிலயே
ஸர்வ ஜீவ தயா சாகரே 

அனுபல்லவி
அனங்க குஸுமாத்யஷ்ட  தேவி சேவிதே
குப்ததர யோகினி பரிவாரே

சரணம்
வஜ்ர ரத்ன மணி மாலா தரனே
சுக்ர க்ரஹ அனுக்ரஹனுத காரனே
அஷ்டதளாசனஸ்தித ரஞ்சனி வந்திதே
அஷ்ட மகா சித்தி வர்ஷய வர்ஷய

அர்த்தம்:
சிறந்த தாய் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்ரத்தின் மூன்றாவது ப்ரகாரத்தில் இருக்கிறாள். ஸர்வஸம்க்ஷோபனம் என்று பெயர் கொண்ட அந்த சக்ரத்தில், அனைத்து உயிர்களுக்கும் தயை புரிகிறாள்.

அனங்க குஸுமா முதலிய 8 தேவிகள் அன்னையை இந்த ஆவரணத்தில் வணங்குகிறார்கள். இங்கு உள்ள யோகினிகள் குப்ததர யோகினிகள் ஆவார்கள்.

வைர ரத்ன மாலையினை அணிந்துள்ளாள். சுக்ரனின் அனுக்ரஹம் கிடைக்க அருள்வாள். எட்டு இதழ்கள் கொண்ட தாமரையான இந்த ஆவர்ணத்தில் உள்ள ரஞ்சனியினை பூஜிப்பதால், அஷ்ட மஹா சித்திகளும் நமக்கு கிடைக்கும் .

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment