Tuesday 28 July 2015

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி த்யானம்

ராகம்: பூர்வி கல்யாணி
தாளம்: ஆதி

பல்லவி
ஸ்ரீ சக்ர நாயகி அகிலாண்டேஸ்வரி
தீன தயாபரி பாலயமாம்

அனுபல்லவி
ஸ்ரீ நகரேஸ்வரி ஸ்ரீ ஹரி சோதரி
ஸ்ரீ வித்யோபாஸன ப்ரியகரி சங்கரி

சரணம்
பாவ ராக தாள ஸ்வரூபிணி
ப்ரபாத கால பார்வதி
அபராஹ்ன கால மஹா லக்ஷ்மி
ஸந்த்யா சமயே சரஸ்வதி

மத்யம கால சாஹித்யம்
நவராத்ரி பூஜா நந்திதே
நவாவரண கீர்த்தன ப்ரியே
நவ வித யோகினி பரிவரே
நதஜன ஸமூஹ ஸம்ரக்ஷிதே

அர்த்தம்:சாமானியவர்களுக்கு தயை புரிபவளும், ஸ்ரீ சக்ரத்தின் நாயகியுமான அகிலாண்டேஸ்வரியே, உன்னை வணங்குகிறேன்.

ஸ்ரீ நகரம் என்னும் இடத்திற்கு தலைவியே, ஸ்ரீ ஹரியின் (விஷ்ணு)  சஹோதரியே, ஸ்ரீ வித்யா உபாசனையில் பெரும் விருப்பம் கொண்டவளே, சங்கரனின் மனைவியே -எல்லாம் நீயே

சங்கீதத்தின் முக்கிய அம்சமான பாவம், ராகம், தாளம் ஆகியவற்றின் உருவம் நீ.காலையில் பார்வதியாகவும், மதியத்தில் லக்ஷ்மியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் நீ இருக்கிறாய்.

நவராத்ரியில் உனக்கு அளிக்கப்படும் பூஜையினால் மனம் மகிழ்வாய். நவாவரண கீர்த்தனைகளிலும் மிகுந்த ஆசை உடையவள். உன்னை சுற்றி 9 விதமான யோகினிகள் உள்ளனர். சாதாரண மானிட சமூஹத்தை பரிவோடு காப்பவள்.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment